states

img

ம.பி: திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடை! - சிபிஎம் மத்திய குழு கண்டனம்

மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடனே உணவுப் பாதுகாப்பு விதிகளின் கீழ் திறந்த வெளியில் இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்த உடனே, வழிபாட்டு தளங்கள் மற்றும் பொது இடங்களில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் வைக்க தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டது. இதனை ஒவ்வொரு மாவட்டத்திலும் பறக்கும் படையினர் ஆய்வு செய்து, விதிகளை மீறுபவர்களின் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.   இதனை தொடர்ந்து, தற்போது உணவுப் பாதுகாப்பு விதிகளின் கீழ் திறந்த வெளியில் இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (14.12.23) மட்டும் 10 இறைச்சி கடைகள் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு சிபிஎம் மத்திய குழு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இது சிறு வியாபாரிகளுடைய வாழ்வாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதலாக இருப்பதுடன் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுகிறதாகும் என்று சிபிஎம் மத்திய குழு தெரிவித்துள்ளது.